News August 27, 2024

கொலை வழக்கில் 3 ரவுடிகள் மீது குண்டாஸ்

image

புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் மணிகண்டனை கடந்த மே 29ம் தேதி நான்கு பேர் கொண்ட கும்பல் கல்லால் தாக்கி கொலை செய்தது. ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து 4 பேரை கைது செய்தனர்.  அசோக் மீது 5 வழக்குகளும் கார்த்திகேயன் மீது 3 வழக்குகளும் ஸ்ரீகாந்த் மீது 2 வழக்குகள் உள்ளன. மூவரையும் கலெக்டர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிந்து உத்தரவிடப்பட்டது. 

Similar News

News October 31, 2025

புதுச்சேரி: வாலிபருக்கு சரமாரி வெட்டு

image

புதுச்சேரி நாவர்குலம் களைவாணர் நகர் பகுதியில் வாலிபர் மீது ஒரு கும்பல் சரமாரி தாக்குதல், தாக்குதலில் படுகாயம் அடைந்த வாலிபர் மிகவும் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தக் கொலை வெறி தாக்குதலுக்கான காரணத்தை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரியில் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

News October 30, 2025

புதுச்சேரி: மின் தடை அறிவிப்பு

image

புதுச்சேரி, நாளை (31.10.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நெடுங்காடு மின் பிரிவிற்குட்பட்ட உயர் மின் அழுத்த பாதையில், சில பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் செருமாவிலங்கை பத்தக்குடி, தேவமாபுரம், காமராஜர் சாலை, கீழபருத்திகுடி, அம்பேத்கார் நகர் வரை உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்துறை உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News October 30, 2025

புதுச்சேரி: உதவி எண்கள் அறிவிப்பு!

image

புதுச்சேரி அரசு ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வில்லியனூர் சார்பாக உதவி எண்கள் அறிவித்தனர், அவை குழந்தைகள் பாதுகாப்பு சேவை 1098, பெண்கள் பாதுகாப்பு 1091, மகளிர் குற்ற தடுப்பு உதவி மையம் 181, இயற்கை பேரிடர் மீட்பு சேவை 1096, சைபர் குற்றங்களுக்கு புகார் எண் 1930, சமூக நலத்துறை உதவி எண் 04132244964 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!