News August 27, 2024

AI பயன்பாடு தொடர்பாக எச்சரிக்கை விடுத்த RBI

image

கடன் வழங்கல், முதலீடு உள்ளிட்ட சேவைகளை வழங்கும் நிதி நிறுவனங்கள் AI பயன்பாடு தொடர்பாக கவனமாக இருக்க வேண்டும் என RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளார். முக்கிய முடிவுகளை எடுக்கும் பிரிவுகளில் AI மாதிரியைக் கைக்கொள்ளும் நிதி நிறுவனங்கள், தனிநபர் தரவுகள் பாதுகாப்பு, அவற்றின் பயன்பாடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விளக்கும் திறனை பெற்றிருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Similar News

News March 30, 2026

ரேஷன் கார்டுக்கு மண்ணெண்ணெய் விநியோகம்

image

நாடு முழுவதும் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் மத்திய அரசு 60 நாள் சிறப்பு திட்டத்தை கையிலெடுத்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் ரேஷன் கார்டுகளுக்கு கூடுதலாக மண்ணெண்ணெய் விநியோகிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் நிலவும் எரிசக்தி சவால்களை சீராக்க தற்காலிக நிவாரணமாக இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2026

அமமுகவுக்கு குக்கர் சின்னம்… ECI அறிவித்தது

image

NDA-வில் 11 தொகுதிகளில் போட்டியிடும் அமமுக தனிச் சின்னத்தில் களம் காணும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த முறை போட்டியிட்ட குக்கர் சின்னத்தை மீண்டும் ஒதுக்க. ECI-யிடம் அக்கட்சி கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக இன்று அதிகாரப்பூர்வமாக ECI அறிவித்துள்ளது.

News March 30, 2026

ஸ்நாக்ஸ் வாங்கும்போது இதை கவனிங்க!

image

குழந்தைகளுக்கோ பெரியவர்களுக்கோ, ஸ்நாக்ஸ் வாங்கும்போது பளபளப்பான பாக்கெட்டை மட்டும் பார்க்காதீர்கள், அதன் லேபிளையும் படியுங்கள் என FSSAI எச்சரித்துள்ளது. குறிப்பாக, அதில் உள்ள பொருள்களின் தகவல், FSSAI உரிம எண், காலாவதி தேதி, ஊட்டச்சத்து மதிப்புகள், சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பின் அளவு ஆகியவற்றை கவனிக்க வேண்டும்; ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம் என்பதை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!