News August 27, 2024

30 பேரின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை

image

நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடகு கடையில் ரூ.1.25 கோடி மதிப்புள்ள 278 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணம் கொள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் நேற்று(ஆக.,26) வரை முப்பது பேரின் கைரேகையை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளூரை சேர்ந்த 2 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாக தகவல்.

Similar News

News September 10, 2025

நெல்லை ரயில் டிக்கெட் BOOK பண்ண போறீங்களா??

image

நெல்லை மக்களே! TAKAL டிக்கெட் முன்பதிவு செய்ய IRCTCல் ஆதார் எண் இணைப்பது எப்படின்னு தெரியலையா??
1. IRCTC இணையதளத்தில் (அ) IRCTC செயலியில் NEWUSERல் உங்கள் விவரங்களை பதிவு பண்ணுங்க
2. ACCOUNT -ஐ தேர்ந்தெடுத்து ஆதார் எண் பதிவிடுங்க.
3. உங்க போனுக்கு OTP வரும் அதை பதிவு செய்து இணையுங்க.
இனி டிக்கெட் முன்பதிவுக்கு அதிகம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க. மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க…!

News September 10, 2025

நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

image

இன்று காலை 10 மணிக்கு மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

பாளையங்கோட்டை என் ஜி ஒ ஏ காலனி பகுதியில் 2 இடங்களில் புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா காலை 10:30 மணிக்கு அப்துல் கப் எம்எல்ஏ தலைமையில் நடக்கிறது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு வாராந்திர குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

News September 10, 2025

நெல்லை: அரசு பள்ளி முன் பெற்றோர்கள் போராட்டம்

image

மருதகுளம் செல்லையா அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு மாணவனுக்கு மட்டும் டிசி வழங்கினார். இதனால் மாணவனின் பெற்றோர், உறவினர்கள் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். மாணவனை மீண்டும் சேர்க்க மறுத்ததால், தலைமை ஆசிரியர் அலுவலகம் முன்பு தர்ணா நடத்தினர். மூன்றடைப்பு போலீசார் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

error: Content is protected !!