News August 27, 2024
விக்கிரவாண்டி அருகே விபத்து: 15 பேர் காயம்

விழுப்புரம் அருகே லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புருஷானூரைச் சேர்ந்த 17 பேர், துக்க நிகழ்ச்சிக்காக சென்னை நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள அழுக்கு பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதியது. இதில், வேனில் பயணித்த 15 பேர் காயம் அடைந்தனர்.
Similar News
News March 13, 2026
விழுப்புரம் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

விழுப்புரம் ரோட்டரி சங்கம் சார்பில் மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம் சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நாளை மார்ச். 14 விழுப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 9:00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறுகிறது. விழுப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு இதில் பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
News March 13, 2026
விழுப்புரம்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 944930680-ஐ அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE
News March 13, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.


