News August 27, 2024
மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்: ஜி.நாகராஜன்

நவீன தமிழ் இலக்கியத்தில் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை அழுத்தமாக கூறியவர்களில் எழுத்தாளர் ஜி.நாகராஜன் முக்கியமானவர். இவரது ‘குறத்தி முடுக்கு’, ‘நாளை மற்றுமொரு நாளே’ ஆகிய 2 நாவல்களும் தமிழின் ஆகச்சிறந்த படைப்பாக உள்ளது. இவரது கதைகளை போலவே, இவரது வாழ்வும் கசப்பான முடிவையே கொண்டுள்ளது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் செயல் இழந்து துணைக்கு ஆளே இல்லாமல் அநாதையாக உயிரிழந்தார்.
Similar News
News July 6, 2025
ஆட்டம் ஆரம்பித்ததும் அதகளம் காட்டிய ஆகாஷ்

இங்கி.,க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம், மழை காரணமாக 80 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஆகாஷ் தீப் பந்தில் ஓல்லி போப் (24 ரன்கள்) & ஹாரி புரூக் (23 ரன்கள்) ஆகியோர் பெவிலியன் திரும்பினர். இதுவரை 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கி., அணி, இந்தியாவின் அசத்தலான பந்துவீச்சில் தடுமாறி வருகிறது. இதில் 4 விக்கெட்டுகளை ஆகாஷே எடுத்துள்ளார்.
News July 6, 2025
தெய்வத்திருமகள் சியான் பொண்ணா இவுங்க…

இன்று வெளியான ‘துராந்தர்’ என்னும் பாலிவுட் படத்தில் டீசரில் இருப்பது யார் என தெரிகிறதா? ரன்வீர் சிங்குடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் இந்த பெண் தான் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் சியான் விக்ரமின் மகளாக நடித்தவர். அன்று சுட்டிக் குழந்தையாக ரசிகர்களை ஈர்த்த சாரா அர்ஜூன், தற்போது 20 வயதில் சாரா பாலிவுட்டில் ஹீரோயினாக கலக்க இருக்கிறார். தமிழிலும் ஹீரோயினாக யாராவது புக் பண்ணுவாங்களா?
News July 6, 2025
ICUவில் அஜித் குமார் தம்பி… அடுத்தடுத்து திருப்பம்

போலீஸ் கஸ்டடியில் கொல்லப்பட்ட அஜித் குமாரின் தம்பி நவீன் மதுரை ஹாஸ்பிடலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. போலீஸ் தாக்கியதில் தனது கால் பாதங்களில் வலி ஏற்பட்டிருப்பதாக நவீன் கூறியதால் சிகிச்சைக்காக அட்மிட் செய்திருப்பதாக அவரது தாய் மாமா விளக்கம் அளித்துள்ளார். அண்ணனை போலீஸ் விசாரிக்கும்போது தன்னையும் தாக்கியதாக நவீன் ஏற்கனவே கூறி இருந்தார்.