News August 27, 2024
வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும்

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் 31ஆம் தேதி முழு வேலை நாள் ஆகும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 53ஆவது ஆடிப்பூரத் திருவிழாவை முன்னிட்டு, கடந்த 6ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராஜ் அறிவித்தார். மேலும், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலை நாள் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 31ஆம் தேதி விடுமுறை என்று நினைத்து விடவேண்டாம்.
Similar News
News December 26, 2025
செங்கல்பட்டு: வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி!

தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் கடலூரைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர், ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் தலா ரூ.4 லட்சம் வரை கொடுத்து ஏமாந்துள்ளனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட இளங்கோவன், மணி, சரண்யா ஆகியோர் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு தலைமறைவாகினர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 26, 2025
தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.
News December 26, 2025
தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாம்பரம் முதல் முடிச்சூர் செல்லும் ரோட்டில் நேற்று கிறிஸ்மஸ் முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு செல்வதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டன. இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.


