News August 27, 2024
தொடரும் அத்துமீறல்: தமிழக மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 8 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தை சேர்ந்த அவர்கள், தனுஷ்கோடி கடல் பகுதிக்கும், தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து, மீனவர்கள் சென்ற விசைப் படகுகளையும் பறிமுதல் செய்த இலங்கை கடற்படை, விசாரணைக்காக அவர்களை மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றுள்ளது.
Similar News
News October 15, 2025
கூகுள் மேப்பில் ஆவணமாகும் தமிழ் பாரம்பரியம்

தமிழகத்தில் உள்ள கலாசார இடங்களை, ‘தகவலாற்றுப்படை’ என்ற பெயரில் கூகுள் மேப்பில் ஆவணமாக்கும் பணியில், தமிழ் இணைய கல்வி கழகம் ஈடுபட்டுள்ளது. அதேபோல் கைவினை பொருள் தயாரிப்பில் சிறப்பு வாய்ந்த கிராமங்கள், கைவினை பொருள்களின் சிறப்பியல்புகளையும் GIS முறையில் பதிவேற்றும் பணி நடந்து வருகின்றன. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க வழிபாட்டு தளங்கள், விளையாட்டுக்களும் ஆவணப்படுத்தப்படுகின்றன.
News October 15, 2025
‘லவ் டுடே 2’ அப்டேட் கொடுத்த பிரதீப்

‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகத்திற்கான கதை தயாராக உள்ளதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ‘டியூட்’ பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், தற்போதைக்கு நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும், வருங்காலத்தில் ‘லவ் டுடே 2’ படத்தை இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர். வரும் 17-ம் தேதி அவர் நடித்த ‘டியூட்’ ரிலீசாகும் நிலையில், டிச.18-ல் ‘LIK’ ரிலீசாகிறது.
News October 15, 2025
வருமானத்தைப் பெருக்க இத பண்ணுங்க..

பொறாமைப்படுபவர்களின் கண் திருஷ்டியில் இருந்து தப்பிக்க, கைப்பிடியளவு உப்பும், 5 கருமிளகையும் எடுத்து கொள்ளவும். முதலில் உங்கள் தலையை 3 சுற்று வலது புறமாக சுற்றுங்கள். அடுத்து வீட்டில் உள்ளவர்களுக்கும் சுற்றவும். சுற்றும்போது கடன் நீங்கி, வருமானம் பெருக வேண்டும் என வேண்டிக்கொள்ளுங்கள். பிறகு, வீட்டுக்கும் திருஷ்டி சுற்றிவிட்டு உப்பையும், மிளகையும் கொட்டாங்குச்சியில் போட்டு எரித்து விடவும். SHARE.