News August 27, 2024

70 வயது மூதாட்டி கற்பழித்து கொலை

image

மும்பை அருகே 70 வயது மூதாட்டி கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிடா கிராமத்தைச் சேர்ந்த மன்சூர் ஷேக் என்பவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக மக்கள் அளித்த புகாரின்பேரில், போலீசார் சென்று பார்த்தபோது மூதாட்டி கற்பழித்து கொல்லப்பட்டது தெரியவந்தது. சம்பவத்தை அடுத்து தலைமறைவான மன்சூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News July 6, 2025

புதிய ரேஷன் கார்டுகள்… மக்களுக்கு ஹேப்பி நியூஸ்

image

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருப்பவர்கள் ஏராளம். ஆனால், புது ரேஷன் கார்டு பெற ஈசியான வழி கிடைத்துள்ளது. ஜூலை 15-ல் தொடங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் அளிக்கும் மனுக்களுக்கு 45 நாள்களில் தீர்வு காண CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த முகாம்களில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் அளித்தால் உடனே அரசு ஒப்புதல் வழங்கும் எனக் கூறப்படுகிறது. உடனே முந்துங்கள். SHARE IT.

News July 6, 2025

தமிழறிஞர் வா.மு.சேதுராமன் மறைவு: தலைவர்கள் அஞ்சலி

image

<<16955086>>தமிழறிஞர் வா.மு.சேதுராமன்<<>> உடலுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுவரை, CM ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், வைகோ, வேல்முருகன், மல்லை சத்யா உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது. சேதுராமனை கௌரவிக்கும் விதமாக அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற முதல்வரின் அறிவிப்புக்கு சேதுராமன் குடும்பத்தினர் இன்று நன்றி தெரிவித்துள்ளனர்.

News July 6, 2025

இந்த தப்பை செய்தால் PF பென்சன் கிடைக்காது

image

உங்களுடைய PF கணக்கில் இந்த விதியை மீறினால் பென்சன் பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். EPFO வகுத்துள்ள விதிகளின்படி, எந்தவொரு ஊழியரும் தனது PF கணக்கில் 10 ஆண்டுகளுக்கு பணத்தை டெபாசிட் செய்தால், அவர் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர் ஆகிறார். அந்த ஊழியர் 50 வயதுக்குப் பிறகு ஓய்வூதியம் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கணக்கின் முழுத் தொகையையும் எடுத்தால் உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

error: Content is protected !!