News August 27, 2024
முதல்வர் கோப்பை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விண்ணப்பிக்க செப்-2வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://sdat. tn.gov.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம் கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் 9,901 பேர். கல்லூரி மாணவர்கள் 10,378 பேர், மாற்றுத் திறனாளிகள் 438 பேர், அரசு பணியாளர்கள் 560 பேர். பொதுப்பிரிவினர் 878 பேர் என மொத்தம் 22,155 பேர் பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 22, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்!

கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் , 8 மற்றும் 10-ம் வகுப்பு,ஐடிஐ, இன்ஜினியரிங்,டிகிரி, செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். SHAREIT
News August 22, 2025
பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

கோவை பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Advanced CNC, Aeronautical Structure, Multimedia போன்ற பிரிவுகளில் நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டது. 8ம் மற்றும் 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுமான தொழிலாளர் நலவாரிய அட்டை அவசியம். இலவச சைக்கிள், பாடநூல்கள், உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு என்ற 88254 34331, 9566531310 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
News August 21, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.