News August 26, 2024

செங்கல்பட்டில் மெட்ரோ பணியால் 3 பாலங்கள் இடிக்க முடிவு?

image

சென்னை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் மேம்பாலம், குரோம்பேட்டை ரேடியல் மேம்பாலம், சிட்லப்பாக்கம் மேம்பாலம் என மூன்று மேம்பாலங்கள் இடைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மேற்கொள்ளப்பட மெட்ரோ பணிகள் காரணமாக இந்த பாலங்கள் இடிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில், பல்லாவரம் மேம்பாலம் சமீபத்தில் தான் கட்டி முடிக்கப்பட்டது.

Similar News

News March 3, 2026

செங்கை: மலிவு விலையில் பைக், கார்

image

செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை சார்பில் கஞ்சா மற்றும் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 60 வாகனங்களுக்கு மார்ச்.7ஆம் தேதி ஏலம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம் பொது ஏலத்தில் விடப்படுகின்றன. ஏலத்தில் பங்கேற்க இன்று மாலை 5 மணிக்குள் ரூ.1,000 நுழைவு கட்டணம் பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News March 3, 2026

திருப்போரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு!

image

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இதயவர்மன் நேற்று 02.03.2026 விருப்ப மனுவை அளித்தார். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அன்புச் செழியன் மற்றும் திமுக-வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News March 3, 2026

செங்கை அருகே கோர விபத்து.. ஒருவர் பலி

image

காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (19). இவர் நேற்று இவரது உறவினர் பூர்ணிமா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மாடம்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி-மாடம்பாக்கம் மேம்பாலத்தில் செல்லும்போது பின்னால் வந்த சரக்கு ஆட்டோ மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் அன்பரசன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

error: Content is protected !!