News August 26, 2024
காவலர் வேலைவாய்ப்பு.. நாளை முதல் விண்ணப்பப் பதிவு

NIA உள்ளிட்ட அமைப்புகளில் காலியாக உள்ள காவலர் வேலைகளுக்கு ஆட்தேர்வு தொடர்பான அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) நாளை வெளியிடவுள்ளது. ssc.gov.in. என்ற இணையதளத்தில் நாளை அறிவிப்பு வெளியானதும் NIA, CAPFs, SSF மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காவலர் வேலைக்கு உடனடியாக விண்ணப்பப் பதிவு தொடங்கும். விருப்பமுள்ளோர் அந்த தளத்தில் அக்டோபர் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். SHARE IT
Similar News
News December 28, 2025
BREAKING: பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்

பிக்பாஸ் நிகழ்ச்சி 84-வது நாளை எட்டிய நிலையில், கடந்த வாரத்தை போல இம்முறையும் டபுள் எவிக்ஷன் உள்ளதாம். டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட கனி வீட்டைவிட்டு வெளியேறுகிறார் என தகவல் கசிந்துள்ளது. இதனால் கனியின் விர்சுவல் ஆர்மி இணையத்தில் பிக்பாஸை திட்டி தீர்த்து வருகின்றனர். அமித் பார்கவ் நேற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்க யாரு வெளியே போவானு எதிர்பார்த்தீங்க?
News December 28, 2025
இனி கல்யாணத்துக்கும் இன்ஷூரன்ஸ்!

இக்காலத்தில் திருமணத்தை நடத்த லட்சம் முதல் கோடிகள் வரை செலவாகும் நிலையில் ஏன் அதற்கு இன்ஷூரன்ஸ் எடுக்கக்கூடாது என்ற பேச்சு எழுந்துள்ளது. அதற்காகவே இந்தியாவில் திருமண இன்ஷூரன்ஸ் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன்படி மோசமான வானிலை, திருட்டு, எமர்ஜென்ஸி போன்ற காரணங்களால் திருமணம் நின்றால் இனி நிதி பாதுகாப்பு கிடைக்கும். ₹7,000 – ₹55,000 வரை பிரீமியம் தொகை செலுத்தி இன்ஷூரன்ஸ் பெற முடியும்.
News December 28, 2025
இந்தியாவிற்காக விளையாடிய பாக். வீரருக்கு நேர்ந்த கதி!

பஹ்ரைனில் நடந்த தனியார் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய பாக். கபடி வீரர் உபைதுல்லா ராஜ்புத்தை அந்நாட்டு கபடி கூட்டமைப்பு காலவரையின்றி தடை செய்துள்ளது. இதுகுறித்து பேசிய ராஜ்புத், தான் விளையாடப் போவது இந்திய அணி என்பது தனக்கு தெரியாது. இதற்கு முன்பு தனியார் போட்டிகளில், இருநாட்டு வீரர்கள் ஒன்றாக விளையாடியுள்ளனர், ஆனால் ஒருபோதும் நாட்டின் பெயர்களில் விளையாடியதில்லை எனத் தெரிவித்துள்ளார்.


