News August 26, 2024
தனக்கனந்தல் ஊராட்சி செயலாளரை நீக்கிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவின்பேரில் தனக்கனந்தல் ஊராட்சி செயலாளர் ஜெகநாதன் தற்காலி பணிநீக்கம் செய்யப்பட்டார். தனக்கனந்தலில் நேற்று குடிநீர் குடித்த மக்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்.
Similar News
News October 22, 2025
கள்ளக்குறிச்சி ரோடு சரியில்லையா? App-ல் புகாரளிக்கலாம்!

கள்ளக்குறிச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News October 22, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் பொருட்கள் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 766 நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது வடகிழக்கு பருவமழை காலத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு நவம்பர் மாதத்திற்கான அரிசி,பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் எம்எஸ் பிரசாந்த் தகவல்.
News October 22, 2025
இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள TN-Alert ஆப்பை பயன்படுத்தலாம்

இயற்கை பேரிடரை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கை செய்திகளை
பெறவும் தமிழக அரசு TN-Alert App-ஐ உருவாக்கியுள்ளது. இதனை Play Store-ல்
இருந்து அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் இயற்கை பேரிடரை முன்கூட்டியே அறிந்து கொள்ள TN-Alert ஆப்பை பதிவிறக்கம் செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் எம் எஸ் பிரசாந்த் தகவல்