News August 26, 2024

நீலகிரியில் கத்தியால் குத்தி தம்பி கொலை

image

கூடலூர் பி.சி.வி. நகரை சேர்ந்தவர் ராகுல் (19). இவரது அண்ணன் சினோய் (26) குடிபோதையில் தந்தையை தாக்கியதை ராகுல் கண்டித்து தடுத்து உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அண்ணன் தம்பியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் காயம் அடைந்த ராகுல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கூடலூர் போலீசார் வழக்கு பதிந்து சியோனை தேடி வருகிறார்கள்.

Similar News

News August 7, 2025

நீலகிரியில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

நீலகிரி செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள 25, Business Development Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News August 7, 2025

உதகையில் நடைபெற்ற தேசிய கைத்தறி விழா

image

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், கைத்தறி துறை சார்பாக 11ஆவது தேசிய கைத்தறி நாள் விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற கைத்தறி விற்பனை கண்காட்சியினை, மாவட்ட ஆட்சியினர் லட்சுமி பவ்யா தண்ணீரு, இன்று ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். சி.எச்.198 தோடா எம்பிராய்டரி நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 7, 2025

இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்

image

தேவர் சோலை பேரூராட்சி பாடந்துறை பகுதியில் மக்கள் உரிமை குரல் என்ற வாட்ஸ்அப் குழுவின் ஒருங்கிணைப்பில் இப்பகுதி பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்று, தேவர் சோலை பேரூராட்சியில் நிலவிவரும் யானை, புலி சிறுத்தை போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை நிரந்தரமாக தடுக்க வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!