News August 26, 2024

ஜீப்பில் தூங்கியவர் உயிரிழப்பு

image

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அழகர்சாமி. இவர் கேரளாவில் உள்ள தனது குழந்தைகளை பார்த்துஆக.24.ல் ஊர் திரும்புவதற்காக தனியார் ஜீப்பில் போடிக்கு வந்துள்ளார். இரவு நேரமானதால் அன்றிரவு ஜீப்பிலேயே தங்க சொல்லிவிட்டு ஜீப் ஓட்டுநர் அவரது வீட்டிற்கு சென்றார். ஓட்டுநர் நேற்று (ஆக.25) மீண்டும் வந்தபோது ஜீப்பில் தூங்கிய நிலையில் அழகர்சாமி இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போடி போலீசார் விசாரணை செய்கின்றனர்.

Similar News

News July 5, 2025

தேனியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தேனி மக்களே தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு<> இங்கே கிளிக் செய்து <<>>விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு தேனி மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இ- ஸ்கூட்டர் வாங்க உங்களது நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க

News July 5, 2025

தகராறில் ஆணை தாக்கிய இரு பெண்கள் மீது வழக்கு

image

கண்டமனூரை சேர்ந்த பாண்டியன் 48, தனது வீட்டில் நகை காணாமல் போனது தொடர்பாக வீட்டிற்கு வெளியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அவரது அண்ணன் மனைவி ஈஸ்வரி,’ நான் தானே பக்கத்தில் குடியிருக்கிறேன் என்னைத்தான் சொல்கிறாயா,’ என்று கேட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஈஸ்வரியின் மகள் முருகேஸ்வரி அரிவாள் பின்புறமாக திருப்பி தலையில் தாக்கியதில் பாண்டியன் காயமடைந்தார். போலீசார் விசாரணை

News July 4, 2025

பாவங்களை நீக்கி பேரின்பம் அருளும் அற்புத திருத்தலம்

image

தேனி மாவட்ட மக்களே நம்ம சின்னமனூரில் பூவாநந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மூலவராக பூவாநந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்கு வருகை தந்து பூவாநந்தீஸ்வரரை மனதார பிரார்த்தனை செய்தால் பாவங்களை நீக்கி பேரின்பத்தை சிவபெருமான் அருள்பாலிக்கிறார். மேலும் திருமணத்தடை மற்றும் குழந்தை வரத்தையும் அருளும் திருத்தலமாக விளங்குவதாக சொல்லபடுகிறது. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுஙக!

error: Content is protected !!