News August 26, 2024
காரைக்கால் அருகே கஞ்சா விற்றவர் கைது

காரைக்கால் அடுத்த திருபட்டினம் காவல் நிலைய போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கிழக்குப்புற வழிச்சாலையில் முகமது மீரான் சாஹிப் என்பவரை போலீசார் சோதனை செய்த போது 10 கிராம் வீதம் கஞ்சாவை சிறிய பொட்டலங்களாகக் கட்டி 300 கிராம் வைத்திருந்த கஞ்சாவை போலீசார் மீட்டு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 12, 2025
புதுச்சேரி: நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

புதுச்சேரி கட்டிட மற்றும் இதர கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2024-25ம் ஆண்டுக்கான கல்வி நிதி உதவி மற்றும் பண பயன் வழங்கப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கான, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் வருகிற 15ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. உரிய ஆவணங்களுடன் அந்தந்த பிராந்திய அலுவலகத்தில் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
News November 12, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

“தனியார் நிருவனத்தின் பெயரில், வணிக அரசின் உதவி திட்டத்தில் சேர்ந்து பயனடையுங்கள் என்ற பெயரில் போலி லிங்க் ஒன்று பரவி வருகிறது. அந்த லிங்கை கிளிக் செய்து உள்ளே சென்று அதில் கேட்கப்படும் தகவல்களை பதிவிட்டால், உங்களது வங்கி கணக்கில் உள்ள பணத்தை மர்ம நபர்கள் மோசடியாக எடுத்து ஏமாற்றி விடுகின்றனர். மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.” என புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 12, 2025
புதுவை: வாக்காளர் பெயர் சேர்க்க முக்கிய அறிவிப்பு

புதுவை மக்களே, உங்கள் பகுதியில் SIR படிவம் வழங்கும் போது நீங்கள் வீட்டில் இல்லையா? இதனால் உங்கள் ஓட்டுரிமை பறிபோய்விடும் என்ற கவலை உள்ளதா? கவலை வேண்டாம். இங்கே <


