News August 26, 2024

வந்தவாசி அருகே 14 சவரன் தங்க நகைகள் திருட்டு

image

வந்தவாசி தெய்யார் கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 14 சவரனை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். சாந்தி என்பவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது, பீரோவில் இருந்த 14 சவரன் தங்க நகைகளை திருடுபோனது தெரியவந்தது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 24, 2025

திருவண்ணாமலை: இனி EB ஆபிஸ் போக தேவையில்லை

image

அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

தி.மலை: ‘உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நடைபெறும் இடங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.24) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, தி.மலை- வி.பி.எஸ்.சி கட்டிடம், மேற்கு ஆரணி- சமுதாயக்கூடம் தேவிகாபுரம், தெள்ளார்- தனியார் திருமண மண்டபம் சீயமங்கலம், அனக்காவூர்- தனியார் திருமண மண்டபம் எச்சூர், கலசப்பாக்கம்- தனியார் திருமண மண்டபம் சிங்காரவாடி மற்றும் கீழ்பென்னாத்தூர்- தனியார் மண்டபம், கல்லாயி ஆகிய இடங்களில் நடைபெறுகின்றன.

News October 24, 2025

திருவண்ணாமலை: குறைந்த விலையில் வாகனம் வேண்டுமா?

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேலூர் சரக போதைப்பொருள் குழுவினரால் போதை பொருள் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 10 இரண்டு சக்கர வாகனம், 1 நான்கு சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களை 30.10.25 அன்று ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. முன்பணம் செலுத்தி பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!