News August 26, 2024

ஆனைவாரி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் 

image

ஆத்தூர், கல்லநத்தம் கிராமத்தில் ஆனைவாரி அருவியில் தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். பின்னர் சுற்றுலா பயணிகள் முட்டல் ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். முட்டல் ஏரி அருகே உள்ள பூங்காவை சுற்றிபார்த்து ரசித்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் மற்றும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News

News August 23, 2025

BREAKING: ரேபிஸ் நோய்க்கு சேலத்தில் இருவர் பலி!

image

சேலம்: ஆத்தூர் மந்தைவெளி பகுதியை சேர்ந்த தர்மன் (35). இவருடைய வீட்டில் வளர்த்து வந்த நாய் இவரை கடித்துள்ளது. இதனை அடுத்து முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று இன்று உயிரிழந்தார். ரேபீஸ் நோய் தாக்கியதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதே போல் கடந்த சில நாள்களுக்கு முன் ரேபீஸ் நோய் தாக்கி கொங்கணாபுரத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 23, 2025

சேலத்தில் நடிகர் கட்டியுள்ள கோயில் எங்கு தெரியுமா?

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த நடிகர் சரவணன் ஓமலூர் வட்டம், வட்டக்காடு என்கிற ஊரில் கோயில் கட்டி இருக்கிறார். வெற்றி விநாயகர் என்று பெயர் கொண்ட அந்த கோயிலின் மகா ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, வருகிற 27.08.2025 காலை 9.30 முதல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது. அதே நாளில் படப்பிடிப்பு தளம், ஒரு ஸ்டுடியோவையும் தொடங்கவுள்ளர். இதனை இயக்குநர் பாண்டிராஜ் ஆக. 27-ம் தேதி இதை திறந்து வைக்கிறார்.

News August 23, 2025

சேலம்: 1,823 விநாயகர் சிலைகள் வைத்து வழிபட அனுமதி!

image

விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற ஆகஸ்ட் 27- ஆம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் 1,823 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட காவல்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர். இதில் மாநகர் பகுதிகளில் மட்டும் 865 இடங்களில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!