News August 26, 2024
கோபியில் கோப்பை வழங்கிய Ex அமைச்சர்

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியை கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். போட்டி முடிந்தவுடன் வெற்றியாளர்களுக்கு கோப்பையை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வு அனைவரும் கலந்து கொண்டனர்.
Similar News
News March 10, 2026
ஈரோடு: மாதம்தோறும் ரூ.4,000 நிதியுதவி வேண்டுமா?

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு, மாதம் தலா ₹4,000 வீதம் மூன்று ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.இந்தத் திட்டத்தைப் பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது.நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது ஈரோடு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க!
News March 10, 2026
ஈரோட்டில் குவிக்கப்பட்ட பாதுகாப்பு படை!

ஈரோடு: 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளுக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் அஜய்குமார் தலைமையில் 91 காவலர்கள் நேற்று கோபி பாரியூர் கோவில் திருமண மண்டபத்திற்கு வருகை புரிந்தனர். இதில் ஆய்வாளர் ஒருவர், 5 ஏ.எஸ்.ஐ-க்கள் மற்றும் 85 காவலர்கள் என மொத்தம் 91 பேர் தகுந்த வசதிகளுடன் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக இந்தப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.
News March 10, 2026
ஈரோடு: இரவு ரோந்து போலீசார் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் நேற்று (09.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


