News August 26, 2024

மனிதரில் புனிதர் ‘அன்னை தெரசா’

image

அன்னை தெரசாவுக்கு இன்று 114வது பிறந்தநாள். மனிதரில் புனிதர் எனப் போற்றப்படும் அவர், அல்பேனியாவில் பிறந்தாலும் 1929இல் இந்தியாவுக்கு வந்த பிறகு ‘இந்தியாதான் இனி என் தாய்நாடு’ என முடிவெடுத்தார். தொடர்ந்து ஏழை, எளியோர், தொழுநோயாளிகளுக்கு உதவிய அவர், 1955இல் ‘காந்தி பிரேம் நிவாஸ்’ பெயரில் நிரந்தர தொழுநோய் மருத்துவமனையை தொடங்கினார். அவர் மறைந்தாலும், அவரது சேவைகள் என்றும் நீங்கா நினைவில் இருக்கும்.

Similar News

News March 12, 2026

சிலிண்டர் தட்டுப்பாட்டால் திருமணம் ரத்து

image

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக திருமண மண்டப உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளது. சிலிண்டர் பற்றாக்குறையால் வந்த திருமண மண்டபங்களில் வந்த விருந்தினர்களுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போர்கால அடிப்படையில் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமண மண்டப உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News March 12, 2026

பாரதியார் பொன்மொழிகள்

image

*விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல்; செய்வது துணிந்து செய். *காயங்கள் குணமாக காலம் காத்திரு; கனவுகள் நினைவாக காயம் பொறுத்திரு. *மலையை பார்த்து வியந்துவிடாதே; மலை மீது ஏறினால் அதுவும் உன் காலின் கீழ்தான். *விழாமல் ஓடுவேன் என்பது நம்பிக்கை.. விழுந்தாலும் எழுந்து ஓடுவேன் என்பது தன்னம்பிக்கை.

News March 12, 2026

பள்ளத்தில் மோதியதால் திரும்பி வந்த பெண்ணின் உயிர்!

image

டாக்டர்களால் கைவிடப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிர்பிழைத்தால் ’மெடிக்கல் மிராக்கிள்’ என சொல்வதுண்டு. அப்படிப்பட்ட மிராக்கிள் சம்பவம் உ.பி.,யில் நடந்துள்ளது. மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட வினீதா சுக்லா என்ற பெண், இறுதிச் சடங்குகளுக்காக ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார். வழியில் ஆம்புலன்ஸ் ஒரு பள்ளத்தில் மோதியதால் ஏற்பட்ட அதிர்வலையில் அதிர்ஷ்டவசமாக அவரது உயிர் திரும்ப வந்துள்ளது.

error: Content is protected !!