News August 26, 2024
திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது

கீழப்பாவூர் பகுதியில் கருணாகரன் மற்றும் கணபதி என்பவர் வீட்டில் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இதில் மதுரையை சேர்ந்த கணேசன் (39), கீழப்பாவூர்சங்கரராமன் (36), தஞ்சாவூர் ரமேஷ் (42), கோவை செந்தில்குமார் (50) ஆகிய நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 157 கிராம் நகை மற்றும் ரூ.2.50 லட்சம் பணம் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News November 2, 2025
தென்காசி: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தேதி அறிவிப்பு

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வீடு வீடாக சென்று சரிபார்க்கும் பணி நவ. 4ம் தேதி முதல் டிச. 4 வரை நடைபெறும். வரைவு வாக்காளர் பட்டியல் டிச. 9ம் தேதி வெளியிடப்படும். 2026 பிப். 7ம் தேதி இறுதி வாக்களர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 2, 2025
தென்காசி: இளைஞர் தற்கொலையில் 2 பேர் கைது

தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (23). இவரும், 17 வயது மாணவியும் காதலித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முந்தினம் மாணவியின் உறவினர்கள் 2 பேர் சிவசுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியின் உறவினர் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
News November 2, 2025
தென்காசி: கிராம ஊராட்சியில் வேலை., உடனே APPLY

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 to 32 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.9க்குள் <


