News August 25, 2024
அனைத்து தொகுதிகளிலும் போட்டி: பிரசாந்த் கிஷோர்

பிஹார் தேர்தலில் 243 தொகுதிகளில் ஜன் ஸ்வராஜ் கட்சி போட்டியிடும் என அக்கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். 2025இல் பிஹாரில் ஆட்சி அமைத்தால், தொழிலாளர்கள் 10 ஆயிரம் சம்பளத்திற்கு பிற மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய தேவை இருக்காது என்றும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பிஹாரின் தலையெழுத்தை அடுத்த ஆண்டு மாற்றுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Similar News
News March 20, 2026
‘நான் சாகப் போகிறேன்’

‘நான் எங்கேயோ, யார் கூடயோ போறேன்னு சொல்ற. நான் உனக்கு மனசால கூட துரோகம் நினைக்கல. ஆனா, நீ என்ன நம்பல. நான் ஒரு நல்ல முடிவ எடுத்து இருக்கேன். கடைசி வர உன்கூட தான் இருப்பேன். I LOVE YOU’. தாம்பரம் அருகே இளம்பெண் அபிநயா(30) தனது கணவன் அருண் குமாருக்கு கடைசியாக அனுப்பிய மெசெஜ் இது. தனது நடத்தையில் கணவன் சந்தேகப்பட்டதால், திருமணமான மூன்றே மாதத்தில் அபிநயா தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகம்.
News March 20, 2026
கூட்டணியில் இணைந்தார் ராமதாஸ்.. அரசியல் திருப்பம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து களம் காண இருப்பதாக ராமதாஸ் – சசிகலா இருவரும் கூட்டாக அறிவித்துள்ளனர். தைலாபுரத்தில் நடைபெற்ற சந்திப்பை அடுத்து, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த கூட்டணி தமிழகம், புதுச்சேரியில் ஒன்றாக தேர்தலை சந்திக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தங்கள் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
16 போர் விமானங்களை இழந்த அமெரிக்கா

ஈரானுடனான போரில் அமெரிக்கா பின்னடைவை சந்தித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை 16 போர் விமானங்களை அந்நாடு இழந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இவற்றில் 10 MQ-9 ரீப்பர் ஆளில்லா விமானங்கள், 3 F-15 ரக விமானங்கள் மற்றும் ஒரு KC-135 எரிபொருள் நிரப்பும் விமானம் அடங்கும். இவற்றில் சில விமானங்கள் ஈரானால் வீழ்த்தப்பட்டவை. மற்றவை நட்பு நாடுகளின் தாக்குதலுக்கு(Friendly fire) உள்ளானவை.


