News August 25, 2024

விளையாட்டுப் போட்டிகளில் பதிவு செய்ய கால நீட்டிப்பு : ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்ய கடைசி நாள் 02.09.2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் நடத்தப்படவுள்ளது. https://sdat.in/cmtrophy/player-login/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். SHARE NOW!

Similar News

News March 3, 2026

நாகை: கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

image

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு கப்பல் போக்குவரத்து மார்ச் 6ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. கனமழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல், போக்குவரத்து சேவை வானிலை சரியானதால் மீண்டும் மார்ச் 6-ல் தொடங்கப்பட உள்ளது. டிக்கெட் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.

News March 3, 2026

நாகை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<> pmay-urban.gov.in <<>>என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News March 3, 2026

நாகை: திமுக சார்பில் விருப்பம் மனு தாக்கல்

image

நாகை மாவட்டம், வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் ஷீதர் மற்றும் வேதாரண்யம் தொகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் முன்னிலையில், நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ. பாரிபாலன் விருப்பமனு அளித்தார்.

error: Content is protected !!