News August 25, 2024

விளையாட்டுப் போட்டிகளில் பதிவு செய்ய கால நீட்டிப்பு : ஆட்சியர்

image

நாகப்பட்டினம் மாவட்டம் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு செய்ய கடைசி நாள் 02.09.2024 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் நடத்தப்படவுள்ளது. https://sdat.in/cmtrophy/player-login/ இணையதளத்தில் பதிவு செய்யலாம். SHARE NOW!

Similar News

News August 19, 2025

நாகையில் ஆறு மாத இலவச ஓவிய பயிற்சி

image

நாகை பொன்னி சித்திர கடல் ஓவிய பயிற்சி மையத்தில் 13 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வார இறுதிநாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் ஓவிய பயிற்சி நடைபெற உள்ளது. 6 மாத காலம் நடைபெறும் இந்த பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியுடன் ஒவிய பொருட்களும் இலவசமாக வழங்கப்படும். மேலும் தகவலுக்கு 9003757531 என்ற எண்ணை அழைக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

நாகை அருகே கொடூர கொலை

image

வேதாரண்யத்தை அடுத்த கோவில்தாவை சேர்ந்தவர் குமார் (38). இவருக்கும் கைலவணம்பேட்டை பகுதியை சேர்ந்த இமானுவேல் என்பவருக்கும் மணல் விற்பதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இமானுவேல், வெங்கடாஜலபதி (55), கார்த்தி (31) ஆகியோர் இணைந்து குமாரை மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்தனர். இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

News August 19, 2025

நாகையில் இரண்டாம் கட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று(ஆக.19) நடைபெற உள்ளது. இம்முகமானது அகரகடம்பனூர், எரவாஞ்சேரி மற்றும் திருக்கண்ணங்குடி ஆகிய ஊராட்சிப் பகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக அகரகடம்பனூர் கிறிஸ்துராஜா தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!