News August 25, 2024

பணியாளரை மிரட்டிய காங்கிரஸ் வட்டார தலைவர் கைது

image

ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த முருகராஜ்(52) என்பவர் ஸ்ரீவி வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஶ்ரீவி அருகே தட்டாங்குளப்பட்டியில் உள்ள ரேசன் கடைக்கு சென்று பொருட்கள் கேட்டு விற்பனையாளர் நாகராஜன்(50) என்பவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரில் ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக முருகராஜை கைது செய்தனர்.

Similar News

News March 12, 2026

விருதுநகர்: உங்க ரேஷன் கடையில் பிரச்னையா.?

image

விருதுநகர் மக்களே, உங்க ரேஷன் கடையில் சரியாக அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கவில்லையா? உடனே புகார் பண்ணுங்க.
1.ராஜபாளையம் – 04563220500
2.ஸ்ரீவில்லிபுத்தூர் – 04563260209
3.சாத்தூர் – 04562260220
4.சிவகாசி – 04562224260
5.விருதுநகர்- 04562243493
6.அருப்புக்கோட்டை – 04566220219
7.திருச்சுழி – 04566282222
8.காரியாபட்டி – 04566255570
9.வெம்பக்கோட்டை – 04562284202
10.வத்திராயிருப்பு – 04563288800

News March 12, 2026

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட காவலர் கைது

image

வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவர் அப்பகுதியில் பெட்டிக்கடையில் கஞ்சா மற்றும் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து முருகேஸ்வரி மாட்டு தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த கஞ்சா மற்றும் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து முருகேஸ்வரி மகன்களான மாரீஸ்வரன், காவலர் பூமாரிமுத்து ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

News March 12, 2026

ஸ்ரீவி: 2 இளைஞர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை

image

விருதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அழகர்சாமி(24), பாலசுப்பிரமணி(26). நண்பர்களான இவர்கள் இருவரும் கடந்த 2023-ம் ஆண்டு கோயில் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர். விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் போக்சோ நீதிமன்ற நீதிபதி அழகர்சாமி, பாலசுப்பிரமணி ஆகிய இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!