News August 25, 2024
சிவகங்கை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

சிவகங்கை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் வருகின்ற 27ஆம் தேதியன்று திருப்பத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கும்,
சிவகங்கை வட்டாரத்திற்குட்பட்ட 7 கிராமங்களுக்கும் மற்றும்
கல்லல் வட்டாரத்திற்குட்பட்ட 9 கிராமங்களுக்குமான முகாம்கள் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி பயன் பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் இன்று(ஆக.25) தெரிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
சிவகங்கை: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

சிவகங்கை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே <
News October 18, 2025
சிவகங்கை: ஆபத்தில் உடனே உதவி வேண்டுமா… !

சிவகங்கையில் 32 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைத்துள்ளனர். இது தவிர தீபாவளியை முன்னிட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அதிக விபத்து ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை கண்டறிந்து, அங்கு நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர் பகுதியில் 7 முதல் 8 நிமிடங்களில் ஆம் புலன்ஸ் வந்துவிடும். தீபாவளிக்காக மருத்துவம், போலீஸ், தீயணைப்பு துறை சார்ந்த அழைப்பிற்கு 108 ஐ அழைத்தால் உதவிகள் தேடி வரும் என தெரிவித்துள்ளனர்.
News October 18, 2025
சிவகங்கை: மருத்துவமனையில் குழந்தை இறப்பில் சந்தேகம்

தேவகோட்டை அருகே தனியார் மருத்துவமனையில் திருவாடானையை சேர்ந்த கார்த்திகேயன், மனைவி மோனிகா பிரசவத்திற்காக நேற்று 17ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதித்த மருத்துவர்கள் தாய், சேய் இருவருக்கும் ஆபத்து எனக்கூறி அறுவை சிகிச்சை செய்ததில் குழந்தை இறந்தே பிறந்தது. தாலுகா போலீசார் குழந்தை இறப்பில் சந்தேகம் என வழக்கு பதிவு செய்துள்ளனர்.