News August 25, 2024
குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதால் வெட்டிக் கொலை

பனங்கால முக்கு பகுதியை சேர்ந்த சூர்யா, அவரது தம்பி ஆனந்த் ஆகிய இருவரும் மரம் வெட்டும் வேலை செய்து வந்தனர். மதுபோதையில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆனந்த் நேற்று சூர்யாவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதைத் தொடர்ந்து ஆனந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சூர்யா குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதால் அவரை கொலை செய்ததாக ஆனந்த் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.
Similar News
News November 6, 2025
குமரி: 310 சிலிண்டர்களுடன் கவிழ்ந்த லாரி

தூத்துக்குடியில் இருந்து இன்று அதிகாலை 310 சமையல் கேஸ் சிலிண்டர்களுடன் லாரி திருவனந்தபுரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது சுருளகோடு வெட்டு திருத்திகோணத்தில் எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடும்போது கேஸ் சிலிண்டர் லாரி ரப்பர் தோட்டத்தில் தலை கீழாக கவிழ்ந்தது.இதில் லாரி டிரைவர் மணிகண்டன் உயிர் தப்பினார். குலசேகரம் தீயணைப்பு வீரர்கள் லாரியிலிருந்து சிலிண்டரை அப்புறப்படுத்தி லாரியை மீட்டனர்.
News November 6, 2025
குமரி: பெண்ணிடம் 3 பவுன் நகை பறிப்பு

ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவ்ர் டெய்லர் லதிகா (49). இவர் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு கண்ணுமா மூடு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து பளுகல் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News November 6, 2025
குமரி: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

குமரி மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!


