News August 25, 2024
50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பணி ஆணை

பெருநகர சென்னை மாநகராட்சியில் பணியாற்றி கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நலனைக் கருத்தில் கொண்டு , 411 பேர் கருணை அடிப்படையில் பல்வேறு பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 50 பேருக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
Similar News
News October 25, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (24.10.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News October 24, 2025
மீனவர்கள் கரைக்குத் திரும்ப அறிவுறுத்தல்!

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்புள்ள நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்றைக்குள் கரை திரும்ப சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை காசிமேடு மற்றும் பட்டினப்பாக்கம் பகுதி மீனவர்கள் புயல் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி வருகின்றனர். மேலும் மீனவர்கள் சங்கத்தினர் விசைப்படகு பாதுகாப்பான இடங்களில் நிறுத்தினர்.
News October 24, 2025
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

சென்னையில் நாளை (அக்.25) அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை அட்டவணைப் படி பணி நாளாக செயல்படும் என முதன்மை கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு அக்.21 அன்று அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


