News August 25, 2024
Apply Now : ஆக., 28 வரை காலக்கெடு நீட்டிப்பு!

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள 3,955 அதிகாரிகள் (PO) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட காலக்கெடுவை ஆக., 28ஆம் தேதி வரை IBPS ஆணையம் நீட்டித்துள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். வயது வரம்பு: 20-30. கல்வி தகுதி: Any Degree. விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவுக்கு ₹180/-. கூடுதல் தகவல்களுக்கு IBPS என்ற இந்த இணைய முகவரியை க்ளிக் செய்யவும்.
Similar News
News August 16, 2025
BREAKING: ஆக.19-ல் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம்

PM மோடி தலைமையில் NDA கூட்டணி MP-க்கள் கூட்டம் ஆக.19-ல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்திற்கு அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் அறிவிப்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
News August 16, 2025
SRH அணியில் பாண்ட்யா..? பதான் சொன்ன ரகசியம்

SRH ஆலோசகராக VVS லக்ஷ்மன் இருந்தபோதே, பாண்ட்யாவின் திறமையை கூறி அணியில் எடுக்க சொன்னதாக பதான் நினைவுகூர்ந்துள்ளார். ஆனால், பாண்டியாவின் திறமை குறித்து வெளியில் அதிகம் பேசப்படாததால், அவரை லக்ஷ்மன் அணியில் எடுக்கவில்லை எனவும், அதற்காக தற்போது வரை அவர் புலம்பி வருவதாகவும் பதான் பகிர்ந்துள்ளார். 2015-ல் ₹10 லட்சத்திற்கு MI-ஆல் வாங்கப்பட்ட பாண்டியா, தற்போது அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார்.
News August 16, 2025
கடந்தாண்டு +1-ல் பெயில் ஆன மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

நடப்பாண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இல்லை என்றாலும், 2024 – 25 கல்வி ஆண்டில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மீண்டும் பொதுத்தேர்வை எழுத வேண்டும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையில் நடப்பாண்டு முதல் 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது, கடந்தாண்டு எழுதியவர்களுக்கு பொருந்தாது என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.