News August 25, 2024
நெல்லை வாலிபரிடம் ரூ.10 லட்சம் நூதன மோசடி

பாளை சமாதானபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வகுரு (32) என்பவர் டெலிகிராமில் பகுதி நேர வேலை வாய்ப்பு இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் லாபம் பெறலாம் என மர்ம நபர் பேசிய வார்த்தையை நம்பி ரூ.10 லட்சத்தை மர்ம நபரின் கூகுள் பேவிற்கு செலுத்தியுள்ளார். ஆனால் அதற்கான கூடுதல் பணம் செல்வகுருவிற்கு வந்து சேரவில்லை. இதுகுறித்து நெல்லை சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 3, 2025
மாநகரில் இன்று இரவு காவல் பணி அதிகாரி விபரம்

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (நவ.2) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.
News November 2, 2025
நெல்லை: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

நெல்லை மக்களே; ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
News November 2, 2025
நெல்லை – மந்திராலயம் சிறப்பு சுற்றுலா ரயில் அறிவிப்பு

நெல்லையிலிருந்து நவ.9 அன்று நாசிக், சீரடி, சிங்கனாப்பூர், பண்டரிபுரம், மந்திராலயம் ஆகிய இடங்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு “பாரத் கௌரவ்” சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் செல்பவர்கள் சுற்றுலா தலங்களை பார்வையிட தனி போக்குவரத்து வசதி, தென்னிந்திய உணவு, பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும். தற்போது இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது என பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.


