News August 25, 2024

நண்பர்கள் போல ‘மெசேஜ்’ அனுப்பி பணம் பறிக்கும் மோசடி

image

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வாட்ஸ் ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் விதவிதமாக புகைப்படங்களை நாம் டி.பி புகைப்படமாக வைத்துள்ளோம். உங்களின் படத்தை டவுன்லோடு செய்து, உங்களுக்கு தெரிந்தவர்களிடம் பணம் பறிப்பது சமீபகாலமாக புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

Similar News

News March 7, 2026

புதுச்சேரி: மென்பொருள் பொறியாளர் தற்கொலை

image

கோட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில், வீட்டில் இருந்த மாத்திரைகளை மிக்ஸியில் அரைத்து குடித்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 7, 2026

புதுச்சேரி: 22 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

image

புதுச்சேரி அரசின் தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் மற்றும் புதுச்சேரி மின்-ஆளுமை சங்கம் இணைந்து, இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் அரங்கில், IT மற்றும் ITES நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. புதுச்சேரி அரசு மற்றும் முன்னணி IT, ITES நிறுவனங்களுக்கு இடையில் மொத்தம் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

News March 7, 2026

காரைக்காலில் இன்று மக்கள் மன்றம் நிகழ்ச்சி

image

காரைக்கால் மாவட்ட காவல்துறை சார்பில் நகர காவல் நிலையத்தில் இன்று (07.03.26) காலை 11.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் மக்கள் மன்றம் எனும் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார்களை நேரில் அளித்து தீர்வு காணலாம் என்று காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!