News August 25, 2024
IPL: KKR அணிக்கு கேப்டனாகும் சூர்யகுமார் யாதவ்

MI அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணியின் டி20 கேப்டனுமான சூர்யகுமார் யாதவை ஏலத்தில் எடுக்க கொல்கத்தா அணி விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. KKR அணியில் இணையும்பட்சத்தில், 2025 ஐபிஎல் சீசனில் அந்த அணியின் கேப்டன் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2017 வரை KKR அணிக்காக அவர் ஏற்கெனவே விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 1, 2026
100 கோடி இந்தியர்களின் கைகளில் ‘இணையம்’

இந்தியாவின் Broadband சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2025, நவம்பர் மாதத்தில் 100 கோடி என்ற மைல்கல்லை எட்டியுள்ளதாக TRAI தெரிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு 13 கோடியாக இருந்த இந்த எண்ணிக்கை, இன்று 100 கோடியாக வளர்ந்துள்ளது. இதில், ஜியோ 51 கோடி பயனர்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஏர்டெல் 2-வது இடத்திலும் (31.42 கோடி), VI 3-வது இடத்திலும் (12.77 கோடி பேர்), BSNL 4-வது இடத்திலும் (2.94 கோடி பேர்) உள்ளது.
News January 1, 2026
மக்களை ஆளக்கூடிய திறன் கொண்டவர் EPS: செல்லூர் ராஜு

TN-ல் சினிமா கவர்ச்சி எப்போதும் உண்டு என்பதால் விஜய்க்கு கூட்டம் கூடுவது சகஜம்தான் என செல்லூர் ராஜு கூறியுள்ளார். அமிதாப் பச்சன் வந்தால் கூடத்தான் கூட்டம் கூடும் என்ற அவர், விஜய்க்கு கூடும் கூட்டமெல்லாம் மேட்டர் இல்லை, யார் நம்மை ஆளப்போகிறார்கள் என்று மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்றார். மேலும், மக்களை ஆளக்கூடிய நிர்வாகத் திறமை கொண்டவர் என்பதை EPS நிரூபித்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 1, 2026
ரூ.3,000 அறிவித்தார் முதல்வர்.. யார் யாருக்கு கிடைக்கும்?

அரசு ஊழியர்களுக்கு <<18730960>>பொங்கல் போனஸ் <<>>அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, C&D பிரிவு பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ₹3,000 என்ற உச்சவரம்பிற்கு மிகை ஊதியம் வழங்கப்படவுள்ளது. மேலும், தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024 – 25-ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் (அ) அதற்கு மேலாக பணிபுரிந்த முழு, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ₹1,000 சிறப்பு மிகை ஊதியம்(போனஸ்) வழங்கப்படவுள்ளது.


