News August 25, 2024

தென்காசி ரயில் பயணிகளின் புது கோரிக்கை

image

செங்கோட்டையில் இருந்து பெங்களூருக்கு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து, செப்.,5, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டை- மைசூருக்கும், மறுமார்க்கமாக செப்.,4, 7 தேதிகளில் மைசூர்- செங்கோட்டைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்தது. இந்நிலையில், இதனை வாராந்திர ரயிலாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News

News December 31, 2025

தென்காசி: கூட்டுறவு வங்கியில் வேலை! உடனே APPLY

image

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.

News December 31, 2025

தென்காசி: அரசு பேருந்து – லாரி மோதி விபத்து!

image

தென்காசியில் இருந்து கொல்லம் நோக்கி சென்ற கேரள மாநில அரசுப்பேருந்து புளியரை அருகே முன்னே சென்ற சரக்கு லாரியை முந்தி செல்ல முயன்ற நிலையில் எதிரே திடீரென ஒரு வாகனம் வந்ததின் காரணமாக அரசு பேருந்து முன்னே சென்ற லாரி பின்பகுதியில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. பேருந்தில் பயணித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்தனர். செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை. விபத்து குறித்து போலீஸார் விசாரனை.

News December 30, 2025

BREAKING: வாசுதேவநல்லூர் MLA-வுக்கு 2 ஆண்டு சிறை

image

நிதி நிறுவனம் ஒன்றில் 2016ல் பெற்ற ரூ.1 கோடி கடனை திருப்பி செலுத்த வழங்கப்பட்ட 2 காசோலைகளும் பணமின்றி திரும்பியதாக நிதி நிறுவனம் தரப்பில் வாசுதேவநல்லூர் மதிமுக MLA சதன் திருமலைகுமாருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதில் MLA-வுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஏதுவாக 2 மாதங்களுக்கு தண்டனை நிறுத்தியும் வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!