News August 25, 2024
10 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு

விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகம், திண்டிவனம் சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போலீசாரை கண்டதும், பணம், நகை ஆகியவைகளை ஜன்னல் வழியாக வீசி விட்டு அலுவலர்கள் தப்ப முயன்றனர். அவர்களை பிடித்து சோதனை செய்து, ரூ.2.28 லட்சம், 4 பவுன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, 10 பேர் மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News August 29, 2025
விழுப்புரம் திமுக நிர்வாகி தந்தை காலமானார்

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளரும், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவருமான ரா.ஜனகராஜ் அவரது தந்தை தா.ராஜாமணி (94) நேற்று(ஆக.28) இரவு வயது மூப்பு காரணமாக உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான க.பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
News August 28, 2025
விழுப்புரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

விழுப்புரம் மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News August 28, 2025
இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

திண்டிவனம் வட்டம் பிரம்மதேசம் பகுதியில் இன்று(ஆக.29) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.