News August 25, 2024

போலி பேராசிரியர்கள் தண்டிக்கப்படுவர்: பொன்முடி

image

போலி பேராசிரியர்கள் நியமனத்தில், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்த விவகாரத்தை விசாரிக்க குழு அமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், போலி நியமனங்கள் குறித்து அவர்கள் விசாரிப்பதாக தெரிவித்தார். முன்னதாக, 32 கல்லூரிகளில் ஒரே நபர் பேராசிரியராக பணிபுரிந்து மோசடி செய்வதாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியிருந்தது.

Similar News

News March 6, 2026

நகைக்கடன் தள்ளுபடி.. இனிப்பான செய்தி வந்தாச்சு

image

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குறித்த வாக்குறுதியை அரசியல் கட்சிகள் அளிக்கும் என பொதுமக்கள் எதிர்பார்கின்றனர். இதனால் சமீபமாக கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெறுவதற்கு பலரும் முனைப்பு காட்டுகின்றனர். ஆனால், தற்போதைய நிதிச்சூழலை பொறுத்து அரசியல் கட்சிகள் முடிவெடுக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதியாக நிச்சயமாக நகைக்கடன் தள்ளுபடி இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News March 6, 2026

ராகுல் மீது காங்கிரஸ் சீனியர்கள் அதிருப்தியா?

image

ராகுலுக்கு நெருக்கமான கிறிஸ்டோபர் திலக், ராஜ்யசபா MP வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, காங்கிரசில் உள்ள சீனியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பதவியை அழகிரி, திருநாவுக்கரசர், தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், கோப்பண்ணா உள்ளிட்டோர் எதிர்பார்த்து இருந்தனராம். ஆனால் சீனியர்களான தங்களை விடுத்து, ஜூனியருக்கு வாய்ப்பு வழங்கியிருப்பது அவர்களை அப்செட் செய்திருக்கிறது என்கின்றனர்.

News March 6, 2026

650 காலியிடங்கள், ரிசர்வ் வங்கியில் பணி..APPLY NOW

image

இந்திய ரிசர்வ் வங்கி, அதன் பல்வேறு அலுவலகங்களில் உதவியாளர் பணிக்கு (650 காலியிடங்கள்) தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இப்பணிக்கான தேர்வு, நாடு தழுவிய அளவில் இரண்டு கட்டமாக (ஆன்லைன் தேர்வு மற்றும் மொழித் திறன் தேர்வு) நடைபெறும். விண்ணப்பிக்க மற்றும் தேர்வு கட்டணங்களை ஆன்லைனில் செலுத்த மார்ச் 8-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விவரங்களுக்கு www.rbi.org.in-ல் பார்க்கவும்.

error: Content is protected !!