News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News August 18, 2025
மாநாட்டுக்கு பள்ளி மாணவர்கள் வர வேண்டாம்: விஜய்

தவெக மாநாட்டுக்கு 2 நாள்களே இருக்கும் நிலையில், விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்கள், முதியவர்கள், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் மாநாட்டில் பங்கேற்க வர வேண்டாம். வீட்டில் இருந்தபடியே மாநாட்டை நேரலையில் காணுங்கள். அதேபோல், தவெக தொண்டர்கள் மாநாட்டுக்கு வரும்போதும், திரும்பும்போதும் பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
News August 18, 2025
கட்சி தாவலுக்கு EPS-ன் செயல்பாடுகளே காரணமா?

அதிருப்தி அதிமுக புள்ளிகளை, <<17438694>>திமுக<<>> தன் பக்கம் இழுக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதற்கு EPS, கட்சியின் 2-ம் கட்ட தலைவர்களை காரில் கூட அனுமதிப்பதில்லை, கருத்துகளை கூற விடுவதில்லை என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். ஜெயலலிதா போல் ஒற்றை முகமாக இருக்க EPS முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொண்டர்கள் வரை அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படுவதாக வைகைச்செல்வன் விளக்கமளித்துள்ளார்.
News August 18, 2025
ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை

இன்று (ஆக.18) வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்படுகிறது. சென்செக்ஸ் 1,084 புள்ளிகள் உயர்ந்து 81,681 புள்ளிகளிலும், நிஃப்டி 363 புள்ளிகள் அதிகரித்து 24,995 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகிறது. Maruti Suzuki, Hero Motorcop, PG Electorplast Ltd ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் உள்ள நிலையில், Hindustan Petroleum உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் உள்ளன.