News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 18, 2025
கடும் நெருக்கடியில் தமிழக ஏற்றுமதி துறை: CM கடிதம்

USA வரிவிதிப்பால் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் ஏற்றுமதி துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக PM மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளதால், இதற்கு விரைவில் தீர்வு காண அவர் கோரியுள்ளார்.
News December 18, 2025
நத்தைகளால் மூளைக்காய்ச்சல்: டாக்டர்கள் எச்சரிக்கை

மழை, குளிர் காலங்களில் நத்தைகள் மூலமாக மூளைக்காய்ச்சல் பரவக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். ஆஞ்சியோஸ்ட்ராங்கைலஸ் என்ற ஒட்டுண்ணியால் பாதிக்கப்பட்ட நத்தைகளை தொட்டால் நமக்கும் அந்த பாதிப்பு பரவிவிடுகிறது. காய்ச்சல், கழுத்துவலி, மயக்கம், குமட்டல், மூர்ச்சை நிலையை தொடர்ந்து மூளைக்காய்ச்சல் உருவாகலாம் என கூறும் டாக்டர்கள், எனவே நத்தைகளை கை, கால்களால் தொட வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.
News December 18, 2025
மங்களகரமான மார்கழி ஸ்பெஷல் கோலங்கள்!

மார்கழி மாதத்தின் ஒவ்வொரு நாளும், பெண்கள் அதிகாலையில் வீட்டுவாசலில் கோலமிட்டு அதன் மீது சாணத்தில் பிள்ளையார் பிடித்து பரங்கிப்பூ வைத்து அழகுபடுத்துவார்கள். இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே வீட்டிற்குள் குடியேறுவாள் என்பது ஐதீகம். அப்படியாக, வீட்டு வாசலை அலங்கரிக்கும் சில கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்த்து, வீட்டில் முயற்சிக்கவும்.


