News August 24, 2024
திருமாவளவனுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

விசிக தலைவர் திருமாவளவனுக்கு அரசு சார்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பட்டியலினத் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் திருமாவளவனுடன் எப்போதும் தனி பாதுகாவலர் (பிஎஸ்ஓ) ஒருவர் பணியில் இருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு தனி பாதுகாவலர் மற்றும் காவலர் ஆகியோர் பாதுகாப்பாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Similar News
News December 26, 2025
காஞ்சிபுரம்: பெண்களுக்கு கொட்டி கிடக்கும் திட்டங்கள்!

தமிழக பெண்களுக்கென சிறப்பு திட்டங்களை அரசு கொண்டுவந்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண்களுக்கு மாதம் ரூ.1000, மறுமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000, ஏழை கைம்பெண்ணின் மகளுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000, ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவித்தொகை ரூ.50,000 மற்றும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தகவலுக்கு <
News December 26, 2025
ஜன.20-ல் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.20-ல் கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். கவர்னர் ஒப்புதலுடன் காலை 9:30 மணிக்கு பேரவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழக அரசு தயாரித்து வழங்கும் உரையை கவர்னர் ஆர்.என்.ரவி வாசிக்கவுள்ளார். அன்றே சட்டமன்ற அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும் என்றும் அப்பாவு கூறியுள்ளார்.
News December 26, 2025
அஜிதா விவகாரத்தில் விஜய் செய்ய தவறியது: தமிழிசை

பெண்களுக்கு அரசியல் என்பது எப்போதும் ஒரு போராட்டமாகவே இருக்கிறது என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். தவெக நிர்வாகி அஜிதா தற்கொலைக்கு முயன்றதை பற்றி பேசிய அவர், விஜய் முன்னதாகவே அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும் என பேசியுள்ளார். மேலும், அஜிதா தற்கொலைக்கு முயன்றது கவலையளிப்பதாகவும் அவரது போராட்டம் வெற்றியடைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


