News August 24, 2024
KKR அணி கேப்டனாகும் சூர்யகுமார்?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் IPL மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், 2025 முதல் அணியை, SKY வழிநடத்த வேண்டும் என KKR அணி நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய T20 அணியின் கேப்டனாக SKY உள்ளதால் KKR நிர்வாகம் இந்த முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. அதேநேரம், ஷ்ரேயஸ் மும்பை அணிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News October 20, 2025
₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் ஹீரோ இவரா?

இந்திய சினிமா இன்று பெரும் வளர்ச்சி கண்டுள்ள நிலையில், நடிகர்கள் கோடிகளில் சம்பளத்தை அள்ளுகின்றன. ஆனால் இந்தியாவில் முதன்முதலில் கோடியில் சம்பளம் வாங்கிய நடிகர் யார் தெரியுமா? தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த சிரஞ்சிவிதான், முதலில் ₹1கோடி வாங்கி அமிதாப், ரஜினி உள்ளிட்ட நடிகர்களை பின்னுக்கு தள்ளினார். ஆபத்பந்தவுடு(1992) என்ற படத்திற்காக, சிரஞ்சீவி ₹1.25 கோடி சம்பளம் வாங்கினார்.
News October 20, 2025
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!

தீப ஒளித் திருநாளில் நண்பர்கள், குடும்ப உறவுகளுக்கு வாழ்த்துகளை தவறாமல் பகிருங்கள். *மத்தாப்பு போல மனம் மகிழட்டும், பட்டாசு போல துன்பம் சிதறட்டும்.. இனிவரும் நாளெல்லாம் வாழ்வில் இன்ப ஒளி பரவட்டும். *அனைவர் வாழ்விலும் இருள் நீங்கி ஒளி பிறக்கவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விடவும் தீபாவளி வாழ்த்துகள். *அறியாமை இருள் நீங்கி அறிவுச் சுடரொளி பரவட்டும்! இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்.
News October 20, 2025
பிஹாரில் 24-ம் தேதி பரப்புரையை தொடங்கும் மோடி

பிஹார் மாநிலத்தில் 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சிகள் இரண்டும் தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிஹார் சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்தை PM மோடி வரும் 24-ம் தேதி தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.