News August 24, 2024
UPS ஓய்வூதிய திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) கீழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50%ஐ உறுதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. PM மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலனடைவார்கள் என அரசு தெரிவித்துள்ளது. ஊழியர்கள் NPS, UPS ஆகியவற்றில் ஏதேனும் ஒரு ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம்.
Similar News
News August 26, 2025
இதயத்தை கிள்ளும் சமந்தாவின் கிளிக்ஸ்!

விவாகரத்து, உடல் நல பிரச்சனைகள் என பல தடைகள் இருந்தாலும், அதை தாண்டி சிங்கப் பெண்ணாக வீரநடை போட்டு வருகிறார் சமந்தா. வெப்சீரிஸ், படங்கள் என மீண்டும் சமந்தா பிஸியாக உள்ளார். இதற்கிடையில் அவர் பகிர்ந்த லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது. மேலே இணைக்கப்பட்டுள்ள சமந்தாவின் போட்டோக்களை நீங்களும் கண்டு மகிழுங்கள். உங்களுக்கு பிடித்த சமந்தாவின் படம் என்ன?
News August 26, 2025
‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ ஏமாற்று வேலை: EPS

4 ஆண்டுகளாக எதையும் செய்யாமல், ஆட்சி முடிய ஓராண்டு மட்டுமே உள்ளபோது கவர்ச்சிகரமான திட்டங்களை ஸ்டாலின் அறிவிப்பதாக EPS சாடியுள்ளார். மேலும் ‘உங்களுடன் ஸ்டாலின் திட்டம்’ என்பது ஏமாற்று வேலை என்றும் விமர்சித்துள்ளார். புதிய திட்டங்களை கொண்டுவராத திமுக, அதிமுகவின் திட்டங்களை முடக்கிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
News August 26, 2025
CM ஸ்டாலின் இல்லை.. சேகர்பாபு, PTR பங்கேற்பு

ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சி இருப்பதால் கேரளாவின் ‘லோக அய்யப்ப சங்கமம்’ விழாவில் பங்கேற்கவில்லை என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள CM பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்த நிலையில், CM ஸ்டாலினுக்கு பதிலாக செப்.20 அன்று அமைச்சர்கள் சேகர்பாபு, PTR அந்த விழாவில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக, TN-ல் கோயிலுக்கு செல்லாத ஸ்டாலின், கேரள அரசின் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தமிழிசை கூறியிருந்தார்.