News August 24, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை? ராகுல் பேச்சு

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம் என ராகுல் காந்தி கூறியுள்ளார். உ.பியில் பேசிய அவர், போதுமான ஆற்றல், திறமை இருந்தும், இந்தியாவில் 90% மக்கள் அரசு அமைப்புகளில் அங்கமாக இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். அரசின் கொள்கை உருவாக்கத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியம் என்ற அவர், இறுதிவரை போராடி காங்கிரஸ் கட்சி அதனை நிறைவேற்றும் என உறுதியளித்தார்.
Similar News
News November 8, 2025
காசு வாங்குங்க, ஆனா ஓட்டு போடாதீங்க: பிரியங்கா காந்தி

பிஹாரில் அரசின் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ₹10,000 வழங்கப்பட்டது. தேர்தல் என்பதால் இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், இந்த பணத்தை கொடுப்பதன் மூலம் வாக்குகளை பெற முடியும் என்று PM மோடி நினைப்பதாக பிரியங்கா விமர்சித்துள்ளார். பகல்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பணத்தை வாங்கி கொள்ளுங்கள், ஆனால் அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என கூறியுள்ளார்.
News November 8, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… அரசு புதிய அறிவிப்பு

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தமிழக அரசு தளர்வுகளை வழங்கியுள்ளது. அதன்படி, பென்ஷன் பெறும் அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் இந்த திட்டத்தில் ₹1,000 பெறலாம். ஓய்வூதியம் பெறும் பெண்கள் விண்ணப்பிக்க முடியாது. அதேநேரத்தில், அந்த வீட்டில் இன்னொரு பெண் இருந்தால் அவர் மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானவர்தான். திட்டத்திற்கு விண்ணப்பிக்க அடுத்த வாரம்தான்(நவ.15) கடைசி. உடனே முந்துங்கள். SHARE IT
News November 8, 2025
தூக்கத்தில் கீழே விழுவது போன்ற கனவு வருவது ஏன்?

தூங்கும் போது கீழே விழுவது போன்ற கனவு வருவது ’ஹிப்னிக் ஜெர்க்’ (Hypnic jerk) எனப்படுகிறது. தூங்கும்போது உங்கள் மூளை Shutdown ஆவதற்கு முன், உங்கள் உடலின் தசைகள் Rest Mode-க்கு சென்றுவிட்டால் இப்படி நடக்கிறதாம். அதாவது நீங்கள் இன்னும் தூங்கவில்லை என நினைத்து rest mode-க்கு சென்ற உங்கள் தசைகளை மூளை எழுப்புகிறது. இதனால்தான் தூங்கும்போது கீழே விழுவது போல உங்களுக்கு கனவு வருகிறது. SHARE.


