News August 24, 2024
பிளாஸ்டிக் கரன்சி பயன்படுத்தும் நாடுகள்

ஆஸி., நியூசிலாந்து, கனடா, வியட்நாம் உள்பட 40 நாடுகளில் பாலிமர் பிளாஸ்டிக் <<13932692>>கரன்சி<<>> பயன்படுத்தப்படுகிறது. ஆஸி. முதல் முறையாக 1998ஆம் ஆண்டு பிளாஸ்டிக் கரன்சிகளை அறிமுகம் செய்தது. கள்ள நோட்டுகளை தடுக்கவும், பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவும் இந்த கரன்சி நோட்டுகள் உருவாக்கப்படுகின்றன. அதே போல, எளிதில் கிழியாது என்பதால், பிரின்டிங் செலவும் குறைகிறது. இந்தியாவில் பிளாஸ்டிக் கரன்சியை எதிர்பார்க்கிறீர்களா?
Similar News
News September 18, 2025
அதிகமாக டீ, காபி குடிக்கிறீங்களா? எச்சரிக்கை!

ஒருநாளுக்கு 2 முறைக்கும் அதிகமாக டீ, காபி குடிப்பவர்களுக்கு பல பிரச்னைகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கிறாங்க. டீ-யில் உள்ள Tanin, காபியில் உள்ள கஃபைன் உடலை இரும்பு சத்தை உறிஞ்சவிடாமல் தடுக்கிறதாம். இதனால் ரத்தசோகை ஏற்படுகிறது. மேலும், High BP, அஜீரண கோளாறு, அல்சர், மூட்டு வலி, இருதய பிரச்னைகள் கூட வரும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஒருநாளுக்கு எத்தனை கப் டீ/காபி குடிப்பீங்க?
News September 18, 2025
ChatGPT-ஐ மக்கள் இதற்கு தான் யூஸ் பண்றாங்களா!

உலகளவில் மக்கள், AI சாட்பாட்டான ChatGPT-ஐ எதற்கு அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து OpenAI ஆய்வு நடத்தியது. அதில் உலக மக்களில் 49% பேர் கேள்விகளை கேட்டு பதில் பெறும் அஸிஸ்டெண்டாகவும், 40% பேர் ஒரு வேலையை செய்து முடிக்க அதை ஒரு வழிகாட்டியாக பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. அதேபோல், உலகில் ChatGPT-ஐ அதிகம் பயன்படுத்துவதில் இந்தியா 2-ம் இடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
News September 18, 2025
தவெகவில் இணைகிறேனா? அதிகாரப்பூர்வ விளக்கம்

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பேசிய புகழேந்தி, தான் தவெகவில் இணையவில்லை. ஆனால், எம்ஜிஆர், அண்ணா போன்ற திராவிட தலைவர்களை முன்னிலைப்படுத்தும் விஜய்யை தூக்கிப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். விஜய்யின் தாக்கம் பயங்கரமாக இருக்கிறது; அவர் பின்னால் செல்லும் கூட்டம் பலருக்கு வேட்டாக மாறும் என்றார்.