News August 24, 2024
குத்தாலம் வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த ஆட்சியர்

குத்தாலம் அருகே திருவாலங்காடு கிராமத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்து மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிப்பட்டுள்ளவர்களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டார். மேலும் உரிய சிகிச்சை வழங்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்கள். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Similar News
News October 30, 2025
மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை தொடர்பாக இணையதளங்களில் வரும் போலி விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். விளம்பரங்களை நம்பி உங்களது பணத்தை இழக்க நேரிடும். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 30, 2025
மயிலாடுதுறை: ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

மயிலாடுதுறை, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு குற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.
News October 29, 2025
மயிலாடுதுறை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வேண்டுமா?

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும் அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


