News August 24, 2024

அரியலூர் ஆட்சியர் அழைப்பு

image

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதியும் மற்றும் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 6ம் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. முதல் பரிசு ரூ.5,000, இரண்டாம் பரிசு ரூ.3,000, மூன்றாம் பரிசு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Similar News

News December 25, 2025

அரியலூர்: செவிலியர்கள் தொடர் போராட்டம்

image

அரியலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், செவிலியர்கள் பணி நிரந்தரம் வேண்டியும், நீதிமன்றம் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் பணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் போராட்டம் தொடரும் என முழக்கம் எழுப்பினார். மேலும் செவிலியர்கள் தேர்தல் வரும் நேரத்திலாவது தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

News December 25, 2025

அரியலூர்: தங்க விலை உயர்வு-பெண்கள் நூதன போராட்டம்

image

தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் ஒன்றுகூடி தங்கத்தின் விலை உயர்ந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கு மேல் விற்பனை செய்யப்படுவதை கண்டித்தும், தங்கம் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நூதன போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கையில் தங்க தாலிக்கு பதிலாக மஞ்சள் கட்டப்பட்ட கயிற்றை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பினர்.

News December 25, 2025

அரியலூர்: ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.24) இரவு 10 மணி முதல், காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!