News August 24, 2024
மாயாவதிக்கு ஆதரவு குரல் கொடுத்த அகிலேஷ்

மாயாவதி குறித்து அவதூறாக பேசிய பாஜக எம்எல்ஏ மீது அவதூறு வழக்கு தொடர வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தியுள்ளார். மாயாவதி உ.பி-யின் ஊழல் மிகுந்த முதல்வர் என்றும், அவரை முதல்முறை முதல்வராக்கி பாஜக தவறு செய்துவிட்டதாகவும் எம்எல்ஏ ராஜேஷ் சௌத்ரி விமர்சித்திருந்தார். மாயாவதியின் கண்ணியத்தை குலைக்கும் பேச்சுக்களை ஏற்க முடியாது எனவும், பாஜக MLA மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News March 11, 2026
இன்னும் முடியவில்லையா திமுக – காங்., பஞ்சாயத்து?

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம். அதில், திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸும் குறிவைப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக பேசப்படுகிறது.
News March 11, 2026
பலன்களை அள்ளி தரும் சுண்டைக்காய்!

➤சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கும். ➤வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உள்ளதாக அகத்தியர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ➤இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.
News March 11, 2026
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை நடைபெறவுள்ள இத்தேர்வுகளை 8,82,806 மாணவ, மாணவிகள், 25,801 தனித் தேர்வர்கள், 395 சிறைவாசிகள் என மொத்தமாக 9,09,002 பேர் எழுதவுள்ளனர். தேர்வுப் பணிகளில் 45,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க சுமார் 5,000 பறக்கும் படையினர் ஈடுபடவுள்ளனர். ALL THE BEST STUDENTS


