News August 24, 2024

விழுப்புரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது 

image

மணற்கேணி ஆய்விதழ் சார்பில் வகுப்பறையில் சாதி மதம் கடந்து சமத்துவத்தை போதிக்கும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் ‘நிகரி’ சமத்துவ ஆசிரியர் விருதுக்கு இந்தாண்டு விழுப்புரம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேலன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி திண்டிவனத்தில் நடைபெறும் விழாவில் முன்னாள் நீதிபதி சந்துரு கையால் விருதினைப் பெற உள்ளார்.

Similar News

News August 29, 2025

விழுப்புரம் திமுக நிர்வாகி தந்தை காலமானார்

image

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக பொருளாளரும், விழுப்புரம் முன்னாள் நகர சபை தலைவருமான ரா.ஜனகராஜ் அவரது தந்தை தா.ராஜாமணி (94) நேற்று(ஆக.28) இரவு வயது மூப்பு காரணமாக உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு திமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான க.பொன்முடி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.லட்சுமணன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News August 28, 2025

விழுப்புரத்தில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.

News August 28, 2025

இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

திண்டிவனம் வட்டம் பிரம்மதேசம் பகுதியில் இன்று(ஆக.29) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!