News August 24, 2024

என்னிடம் போலீஸ் விசாரணையா?

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்து வருகின்றன. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி மொட்டை கிருஷ்ணனுக்கு தஞ்சம் கொடுத்ததாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதையடுத்து, நெல்சனிடம் இன்று விசாரணை நடந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்நிலையில், இதனை மறுத்துள்ள நெல்சன், தன்னை போலீஸ் விசாரிக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

Similar News

News November 1, 2025

3,740 கோயில்களில் கும்பாபிஷேகம்: சேகர்பாபு

image

திராவிட மாடல் ஆட்சியில், இதுவரை 3,740 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். பல ஆண்டு காலமாக ஓடாமல் இருந்த தங்கத்தேர், வெள்ளித்தேர், மரத்தேர்களை ஓட வைத்த பெருமையும் திமுக அரசுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

News November 1, 2025

தங்கம் விலையில் அக்டோபரில் நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றம்

image

கடந்த மாதம் 1-ம் தேதி சவரனுக்கு ₹240 விலை உயர்வுடன் தொடங்கிய தங்கம் விலை மளமளவென உயர்ந்து கடைசி நாளான நேற்று சவரன் ₹90,400 என்ற நிலையில் முடிந்தது. சர்வதேச சந்தையில் கடந்த 7 நாள்களாக உயர்வு, சரிவு என மாற்றங்கள் இருந்ததால் நம்மூர் சந்தையிலும் சவரன் ₹97,600-ல் இருந்து ₹7,200 குறைந்தது. உலக சந்தையில் தற்போது விலை நிலையாக இருப்பதால் இன்று(நவ.1) பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2025

நாளை உருவாகிறது புதிய புயல் சின்னம்.. மழை அலர்ட்!

image

மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால், நவ.6-ம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘மொன்தா’ புயலாக மாறி ஆந்திராவில் கரையைக் கடந்த நிலையில், வங்கக்கடலில் அடுத்த புயல் சின்னம் உருவாகியுள்ளது.

error: Content is protected !!