News August 24, 2024
72 மணி நேரத்தில் காணாமல் போன பள்ளி சிறுமி மீட்பு

பெரம்பலூர் அருகே மலையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அமிதாபச்சன் சிவரஞ்சனி இவர்கள் மகள் தோமினி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். 21ஆம் தேதி இவர் காணாமல் போனதாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் இன்று புதிய பேருந்து நிலையத்தில் தனியாக இருந்த பள்ளி மாணவியை ஆட்டோ ஓட்டும் நபர் சிறுமியை அழைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுமியிடம் விசாரணை நடைபெற்றது.
Similar News
News March 10, 2026
பெரம்பலூர்: பாமகவினர் தீவிர பிரச்சாரம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பத்தூர், படைவெட்டிக்குடிக்காடு ஆகிய கிராமங்களில் பாமக ஒன்றிய செயலாளர் தனவேல் ஏற்பாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில், தமிழக மக்களுக்கு, திமுகவினர் பொய் வாக்குறுதிகள் வழங்கியதாக வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு துண்டு பிரசூரம் மூலம் தெரிவித்து, தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.
News March 10, 2026
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கடலூரில் கைது!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அடுத்த ஒகலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா (42). இவர் கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியில் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட திட்டக்குடி போலீசார், தகவலறிந்து கருப்பையாவை கையும் களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
News March 10, 2026
பெரம்பலூர்: பழங்கால வெங்கல சிலை கண்டெடுப்பு!

பெரம்பலூர் மாவட்டம், மருதையான் கோயில் பகுதியில் குடியிருந்து வருபவர் பாலச்சந்தர் (38). இவர் புதிதாக வீடு கட்டுவதற்கு அங்கு அஸ்திவாரம் தோண்டியுள்ளார். அப்போது, வெங்கல உலோகத்தாலான இரண்டு அடி உயரம் உள்ள பழங்கால பெருமாள் சிலை, பூஜை செய்யும் மணி மற்றும் தீபம் ஏற்றும் விளக்கும் கிடைத்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், வருவாய்த் துறையினர் சிலையை மீட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.


