News August 24, 2024
மக்கள் குறைகள் தீர்க்கும் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், வரும் 27ஆம் தேதி காலை 10 மணி அளவில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், குறு, சிறு தொழில் துறை நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு, மக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். பொதுமக்கள் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை மனுவாக தரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 25, 2025
நாளை இங்கெல்லாம் ’உங்களுடன் ஸ்டாலின் முகாம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மிலிட்டரி ரோடு தனலட்சுமி திருமண மண்டபம், குன்றத்தூர் நகராட்சி, முருகன் கோயில் ரோடு ராமச்சந்திரா மஹால், காவனூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகிலும், வாலாஜாபாத் வாரணவாசி SL நாதன் திருமண மண்டபம் , காஞ்சிபுரம் கீழம்பி ஊராட்சி மன்ற அலுவலகம், கொல்லச்சேரி குன்றத்தூர் மெயின் ரோடு, ஏ.பி.எஸ் திருமண மண்டபம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
News August 25, 2025
காஞ்சிபுரம்: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <
News August 25, 2025
காஞ்சிபுரம்: தாசில்தார், விஏஓ லஞ்சம் கேட்டால்? இதை பண்ணுங்க

காஞ்சிபுரம் மக்களே சாதி, வருவாய், குடியிருப்பு மற்றும் மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்கு, பட்டா மாற்றம், சிட்டா உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக நாம் வாழ்க்கையாகல் கண்டிப்பாக ஒருமுறையாவது தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இருப்போம். அங்கு இவற்றை முறையாக செய்யாமல் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்புத் துறையில் (044-27237139 ) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்கள்.