News August 24, 2024

மாணவரின் உடலை வாங்க மறுத்த பெற்றோர்

image

நாமக்கல், வரகூர் அரசினர் மேல்நிலை பள்ளியில் +1 பயின்று வந்த மாணவர்கள் ( ஆகாஷ், ரித்திஷ்) இடையே ஏற்பட்ட தகராறில் நவலடிபட்டியை சேர்ந்த ஆகாஷ் தலையில் அடிபட்ட நிலையில் உயிரிழந்தார். எனவே ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் வரை ஆகாஷ் உடலை வாங்க போவதில்லை என பெற்றோர்கள் திட்டவட்டமாக உள்ளனர். நாமக்கல் அரசு மருத்துவமனையில் மாணவரின் பெற்றோரிடம் டிஎஸ்பி ஆனந்த்ராஜ் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

Similar News

News December 24, 2025

பரமத்தி வேலூர் வசமாக சிக்கிய நபர்!

image

பரமத்தி அருகே அமைந்துள்ள வாழவந்தி பகுதியில் லாட்டரி விற்பனை அதிக அளவு நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பெயரில் டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் தீவிர ஆய்வு நடத்தியதில் வாழவந்தி பகுதி சேர்ந்த அசோகன் என்பவர் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரிகளை விற்பனை செய்வதை கண்டறிந்தனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

News December 24, 2025

நாமக்கல்: ஈஸியா பட்டா பெறுவது எப்படி ?

image

நாமக்கல் மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், eservices.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று, அதில் ‘Apply Patta transfer’ என்று ஆப்ஷன் மூலமாக வீட்டிலிருந்த படியே புதிய பட்டாவிற்கு விண்ணப்பிக்கலம். (SHARE பண்ணுங்க)

News December 24, 2025

ராசிபுரத்தில் கடத்திக் கொலை: சிக்கிய குற்றவாளி!

image

ராசிபுரம் அரிசி வியாபாரி லோகநாதன் தொழில் போட்டி காரணமாக கடத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி விஜயகுமார் (49) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இவரே இந்தக் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டவர் எனப் போலீஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இருவர் கைதான நிலையில், தற்போது முக்கிய நபர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!