News August 24, 2024
நீதிபதி கேட்ட ஒரே கேள்வி.. கதறி அழுத சஞ்சய் ராய்!

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு, உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த டெல்லி ஐகோர்ட்டில் சிபிஐ அனுமதி கேட்டிருந்தது. அப்போது, “இந்த சோதனைக்கு நீங்கள் சம்மதித்து ஏன்? என நீதிபதி கேட்டார். இதற்கு கதறி அழுத சஞ்சய் ராய், “நான் நிரபராதி. சிபிஐ என்னை எப்படியாவது சிக்க வைக்க நினைக்கிறது. உடனே என்னை சோதனை செய்யுங்கள். அப்போதாவது உண்மை தெரியும்” எனக் கூறினார்.
Similar News
News July 5, 2025
APRO பணிகளில் திமுக ஐடி விங் ஊழியர்கள்? இபிஎஸ் தாக்கு

உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (APRO) பணியிடங்களில் திமுக ஐடி விங் ஊழியர்களை நியமிப்பதாக தகவல் வெளியாவதாக குறிப்பிட்டுள்ள இபிஎஸ், அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு இளங்கலை படிப்புடன், பத்திரிகை & மக்கள் தொடர்பு (அ) மீடியா சயின்ஸ் கட்டாயமாக்கப்பட்ட அரசாணையையும் திமுக அரசு திரும்பப் பெற முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தலுக்காக இவர்களை பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
News July 5, 2025
148 டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில்..

IND vs ENG மேட்சில், டெஸ்ட் கிரிக்கெட்டின் 148 ஆண்டுகால வரலாற்றில் மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. ENG-ன் பிரைடன் கார்ஸின் சிராஜ் பந்துவீச்சில் டக் அவுட்டாகி வெளியேறியது தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் 10,000-வது டக் அவுட்டாகும். 1877-ல் ENG-க்கு எதிராக ஆஸி.யின் நெட் கிரிகோரி தான் முதன்முதலில் டக் அவுட்டாகி இருந்தார். 148 வருடங்கள், 3 மாதங்கள் & 20 நாள்கள் கழித்து 10,000-வது டக் அவுட் நிகழ்ந்துள்ளது.
News July 5, 2025
விசிக – காங்., இடையே வெடித்தது சண்டை..!

ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை, 2011-ம் ஆண்டை போல் விசிகவும் பாமகவும் ஒரே கூட்டணியில் இருக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இதற்கு விசிகவின் வன்னி அரசு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்., வலிமையாகவா இருக்கிறது என வினவிய அவர், விசிகவிற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனால், திமுக கூட்டணிக்குள் சண்டை வெடித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.