News August 24, 2024
ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சனிடம் விசாரணை

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் அவரது குடும்ப நண்பர் என்பதால், அவரிடம் விசாரணை நடக்கிறது. ஏற்கெனவே, இவ்வழக்கு தொடர்பாக அவரது மனைவி மோனிஷாவிடம் விசாரணை நடந்தது. இந்நிலையில், அவர் தனது நண்பர் மட்டுமே, கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என நெல்சன் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News November 3, 2025
கூட்ட நெரிசல்தான் காரணம்: மன்னிப்பு கேட்ட ஷாருக்

கூட்ட நெரிசல் மரணங்கள் நாட்டை உலுக்கிய நிலையில், நடிகர் ஷாருக்கான் இந்த வருட பிறந்தநாளில் தனது ரசிகர்களை சந்திக்கவில்லை. இது குறித்து X தளத்தில், ரசிகர்களை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால், காத்திருந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இந்த முடிவை எடுக்க, கூட்டநெரிசல் பிரச்னையே காரணம். உங்களின் பாதுகாப்புக்காக தான் இந்த முடிவை எடுத்தேன் எனவும் பதிவிட்டுள்ளார்.
News November 3, 2025
நீதிமன்றத்தை நாடுகிறார் செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செங்கோட்டையன் இன்று நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளார். நோட்டீஸ் கூட வழங்காமல் கட்சி விதிகளை மீறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார். ஆனால், கட்சி விதிகளின் அடிப்படையில்தான் நீக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று இரவு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த செங்கோட்டையன், இன்று வழக்கு தொடரவிருக்கிறார்.
News November 3, 2025
அனைத்து மாவட்டத்திற்கும் HAPPY NEWS

தாயுமானவர் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று முதல் வீடு தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன. மூத்த குடிமக்களுக்கான வயது 70-ல் இருந்து 65-ஆக தளர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு, நவ.3 – 6-ம் தேதி வரை வழங்குவதாக TN அரசு அறிவித்துள்ளது.


