News August 24, 2024
IPL: ரோஹித் ஷர்மாவுக்கு ₹50 கோடி?

MI அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் ஷர்மாவை ஏலத்தில் எடுக்க, DC & LSG ஆகிய இரு அணிகள் போட்டிப் போட்டுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. MI அணியைவிட்டு அவர் வெளியேறினால், ₹50 கோடி கொடுத்தாவது ஏலத்தில் எடுக்க இரு அணிகளின் உரிமையாளர்களும் திட்டமிட்டுள்ளதாக அறியமுடிகிறது. இந்த இரு அணிகளும் இதுவரை IPL கோப்பையை வெல்லவில்லை. ரோஹித்தை அணிக்கு கொண்டுவந்தால் வெற்றிவாகை சூடலாம் என அவர்கள் எண்ணுகின்றனர்.
Similar News
News July 5, 2025
விதிகளை மீறிய ஜடேஜா..! பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா?

இங்கி., எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஜடேஜா 41 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் 2ம் நாள் அதிகாலையிலே அணி பேருந்துக்கு காத்திருக்காமல் மாற்று வாகனம் மூலம் மைதானத்துக்கு சென்று பயிற்சி மேற்கொண்டார். இந்திய வீரர்கள் தொடர்களில் விளையாடும் போது பிசிசிஐ ஏற்பாடு செய்யும் வாகனங்களிலே பயணிக்க வேண்டும் என விதிகள் உள்ளன. இதை ஜடேஜா மீறியிருந்தாலும் பிசிசிஐ நடவடிக்கை எடுக்கவில்லை.
News July 5, 2025
AI செய்த மேஜிக்: 18 ஆண்டுகள் கழித்து கர்ப்பமான பெண்!

கொலம்பியா தம்பதிக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை. IVF சிகிச்சையும் பலனளிக்காமல் போக, அவர்கள் கொலம்பியா பல்கலைக்கழக கருவுறுதல் மையத்தை அணுகினார். அங்கு AI உதவியுடன் ஆண்களின் மறைந்திருக்கும் விந்தணுக்களை அடையாளம் காணும் முறையில் சிகிச்சை அளிக்கப்பட, தற்போது அவர்கள் கர்ப்பமடைந்துள்ளனர். AI மனித இனத்திற்கே பிரச்னை எனக் கூறப்படும் நிலையில், இது போன்ற செய்திகள் நம்பிக்கை அளிக்கின்றன.
News July 5, 2025
அஜித் குமார் மரணம்… ஓபிஎஸ் நேரில் அஞ்சலி

திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் அடித்துக் கொல்லப்பட்ட அஜித் குமார் வீட்டிற்கு நேரில் சென்ற முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர், 2 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இந்த கொடூரத்திற்கு காரணமானவர்களை விரைவில் தண்டிக்க வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.