News August 24, 2024
நேபாள பேருந்து விபத்து: பலி 41ஆக உயர்வு

நேபாளத்தில் நேரிட்ட பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து நேபாளத்துக்கு பேருந்தில் ஆன்மிக சுற்றுலாவாக 43 பேர் சென்றிருந்தனர். காத்மாண்டு நோக்கி பேருந்து சென்றபோது, மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் நேற்று 27 பேர் பலியான நிலையில் இன்று மேலும் 14 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது.
Similar News
News November 5, 2025
BREAKING: தேர்தல் கூட்டணி.. இபிஎஸ் புதிய அறிவிப்பு

தேர்தல் கூட்டணி பற்றி எங்கும் பேச வேண்டாம் என மாவட்ட செயலாளர்களுக்கு EPS அறிவுறுத்தியுள்ளார். கூட்டணி குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம் எனவும் அதனை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். குறிப்பாக, பூத் கமிட்டி பணிகளை சரியாக கவனித்தாலே வெற்றி உறுதி எனவும் நிர்வாகிகளுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார். அதிமுக நிர்வாகிகளின் கூட்டணி அழைப்பை தவெக நிராகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News November 5, 2025
இவைதான் இந்தியாவின் விலை உயர்ந்த விஷயங்கள்!

பொதுவாக உலகளவில் பிராண்டட் பொருள்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால், இந்தியாவை பொறுத்தவரை அவை சற்று மாறுபடுகின்றன. இங்கு கழுதைப்பாலில் தொடங்கி தேயிலை வரை, அதன் சிறப்புத் தன்மை காரணமாக அதிக விலைக்கு விற்பனையாகின்றன. அந்தவகையில், இந்தியாவில் அதிகவிலை கொண்ட பொருள்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். இதில் உங்களை ஆச்சரியப்படுத்தியதை கமெண்ட் பண்ணுங்க.
News November 5, 2025
காங். தோல்வியை மறைக்க ராகுல் முயற்சி: கிரண் ரிஜிஜூ

<<18205262>>ஹரியானா வாக்கு திருட்டு<<>> குறித்து ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துள்ளார். ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்களே வாக்காளர் பட்டியல் தொடர்பாக எந்த புகாரும் அளிக்கவில்லை எனவும், காங்கிரஸின் தோல்விகளை மறைக்க ராகுல் பொய்யான தகவல்களை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், ஜென் Z வாக்காளர்களை ராகுல் தூண்டிவிடுவதாகவும் சாடியுள்ளார்.


